பக்கங்கள்

சனி, 2 டிசம்பர், 2023

சிலுக்கு

Silk screen paintings




Marilyn Monroe & Vijayalakshmi aka Silk Smitha at 36 years old


ஹாலிவுட்டில் ரசிகர்களை தன் ஆளுமையான அழகால் கவர்ந்த மர்லின் மன்றோ அவர்களின் மரணத்தின் போது Pop Art கலைஞரான Andy Warhol அவரை சிறப்பிக்கும் விதமாக விதமாக silk screen painting ல் வரைந்த இந்த ஓவியம் கலை உலகில் பரவலாக வரவேற்கப்பட்டது. பளிச்சிடும் வண்ணங்கள், வெகு மக்களுக்கு பரிட்சையமான உருவங்கள், எளிதில் கவரக்கூடியது, எள்ளல் நகையுடன் என வெகு சன மக்களின் நுகர்வு ரசனையை பிரதிபலிக்கும் கலை இயக்கம். 1950களில் தொடங்கி 1970களின் காலகட்டம் வரை இந்த கலை இயக்கம் பிரசித்து பெற்று இருந்தது.


மர்லின் மன்றோ : தன் அழகால் ஹாலிவுட் திரை உலகை ஆளுமை செய்த நட்சத்திரம். வயது, எடை, உடல் அளவு போன்ற எண் அளவுகள் உங்களை அடிமைப் படுத்துபவை என்றவர். தன் 36 வயதில் மரணமடைந்தார்.


கோலிவுட்டில் தன் அழகால் தமிழ் திரையுலகில் இன்று வரை ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கும் நடிகை சில்க் ஸ்மிதா. நடிக்க வரவில்லை என்றால் நக்சலைட் ஆக ஆகியிருப்பேன் என சொன்னவர்.

திரை உலகின் சுரண்டலில் பலியான ஒரு நட்சத்திரம்.


மற்ற வீட்டு பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்க ஆசைப்படுகின்றது என்ற எண்ணத்தின் தொகுப்பான வெளிப்பாடுதான் சில்க்.


சில்க் என்றால் இன்றுவரை எல்லாரும் vibe செய்து கொண்டு 🔥 விட்டுக் கொண்டிருக்கும் Millineal, Gen Z தலைமுறையினருக்கு இன்று சில்க் ஒரு vibe material. அவ்வளவே.


எதிர்காலத்தில் எல்லாருமே 15 நிமிடங்கள் பிரபலமாக ஆகுவர் என்று 1960களில் Andy Warhol சொன்னார்.


இன்று எல்லாருமே 15ல் இருந்து 90 விநாடிகள் பிரபலமாக Instagram, YouTube ல் போராடிக் கொண்டிருக்கின்றனர்.


மன்றோவும் சில்க் ம் உறைந்து போய் இருக்கிறார்கள்.


- பாரதி ஆ.ரா

செவ்வாய், 25 ஜூலை, 2023

அகந்தை கொண்ட கதை சொல்லி

இயக்குனர் மகேந்திரன் பிறந்த தினம் 

ஜூலை 25

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தனி முத்திரை பதித்த ஒரு இயக்குனர் மகேந்திரன். இன்றைய தலைமுறையினருக்கு தெறி பட வில்லன் என அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவரது இருப்பை சாசனம் போட்டு காட்ட உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே ஆகிய படங்கள் உள்ளன. 

இவர் ஏன் தமிழின் மிக முக்கியமான இயக்குனர்:

சினிமா என்பதை காட்சி ஊடகம் என்ற அளவில் சரியாக புரிந்து கொண்டு சிறந்த கலைப்படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர். 1960களில் கதை, வசனம் எழுதுபவராக தான் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்குகிறார். தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 1970 களின் பிற்பகுதியில் இயக்குனராக அறிமுகமாகிறார். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் தனது முதல் படத்திற்கு எழுத்தாளர் உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலை தழுவி படமாக எடுக்கிறார். ரஜினி நடிகனின் மற்றொரு பரிமாணத்தை திரையில் காட்டினார்.

அடுத்த படமான உதிரிப்பூக்கள் மூலம் காட்சி மொழியில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கினார். அந்த பனத்தின் மொத்த வசனத்தையும் இரு பக்கத்தில் எழுதிவிட முடியும். அந்த அளவுக்கு காட்சி மொழியில் சிறந்த கலைப்படத்தை உருவாக்கி அதை வெள்ளி விழா படமாக வெற்றி பெறவும் செய்தார்.

இவர் கதைகளில் மனிதனின் அக உணர்வுகளையும் அதன் குணாதிசயத்தையும் நுட்பமாக காட்சி படுத்தி இருப்பார்.

முள்ளும் மலரும் படத்தில் தான் என்ற அகங்காரம் பிடித்த ஒரு அண்ணனின் கதையை சொல்லி இருப்பார். அந்த கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் தான் தோற்பதைக் கூட கர்வமாக நான் உனக்கு வெற்றியைத் தருகிறேன் என்பார்.

உதிரிப்பூக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரம் இறுதியில் தான் ஊராரால் சாவுக்கு தயாராகும் போது, "நான் பண்ண தப்புலயே மோசமான தப்பு உங்களையும் என்ன மாதிரி மாத்தினது தான்" என்று சொல்வான்.

அகந்தை கொண்ட இரு கதாபாத்திரங்களை வைத்து தமிழின் சிறந்த படங்களை அளித்திருப்பார்.