பக்கங்கள்

வியாழன், 18 ஜனவரி, 2024

மறத் தமிழச்சிகளும் மானமுள்ள ஆண்களும்: ஏறு தழுவுதல் விளையாட்டு

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



தமிழர் பண்பாடு என பல ஓர்மைக் கூறுகளை பொதுமைப் படுத்தி பேசி வருகின்றோம். பண்பாடு என்பது அடிப்படையில் ஒரு உயிரின் மீது இன்னொரு உயிர் வைக்கும் அன்புணர்வில் இருந்து தொடங்குகின்றது. மனித நாகரீகம் என்பது இத்தகைய மானுட நேய உணர்வின் வெளிப்பாடு.


வல்லாதிக்கம் ஒரு ஓர்மை கலாச்சாரத்தை நிறுவ முயல்கையில் மக்கள் பண்பாடு என்பது அதனதன் உட்கூறுகளுக்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கின்றது. வல்லாதிக்க சக்திகள் மக்கள் பண்பாட்டை தன் வயப்படுதத்திக் கொள்ள முயல்கின்றன.


இன்னொரு புறம் சாதி உணர்வுடன் சல்லிக்கட்டு விளையாட்டு தொடர்புபடுத்தி பார்க்கப்படுகின்றது.


சில ஊடகங்கள் சல்லிக்கட்டில் காளை அடக்குபவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகின்றன.


சல்லிக்கட்டு என்பது சல்லிக் காசுகளுக்காக விளையாடப்படுவது. தங்களின் வீரத்தை வெளிக்காட்டிக் கொள்ள விளையாடுகின்றனர். ஆனால் அந்த வீரம் என்கிற உணர்வு சல்லிக்காசு மதிப்பே உடையது என்றே புரிந்து கொள்ளலாம். வீரம் என்ற உணர்வு அர்த்தமற்றது. முறுக்கு மீசை, அருவா, மடிச்சி கட்டிய வேட்டி. இவையெல்லாம் வீரம் என்று கருதினால் அது சல்லிக்காசுக்கு ஈடாகாது.


ஏறு தழுவுதல் எங்கள் பண்பாடு எனும் பொழுது அதில் எல்லா சாதியினரும் இருக்க வேண்டும். அரசு வேலைக்கு இதெல்லாம் ஒரு தகுதியாக கருதினால் பெண்களுக்காகவும் சல்லிக்கட்டு நடத்தலாம்.


புலியை மறத்தால் விரட்டிய தமிழ் பெண்டிர் இங்குண்டு.


தமிழர் பண்பாட்டில் காவியை பூச நினைத்தாலும் விரட்டி அடிக்க வேண்டும்.

தமிழர் பண்பாடு என பிற்போக்கு தனங்களை போற்றாமல் அவற்றை களைந்து தமிழர் பண்பாட்டை சமத்துவமாக செழுமைப் படுத்தி வளர்வதே தமிழர் பண்பாடு.


யாதும் ஊரே யாவரும் கேளிர்


- பாரதி ஆ.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக