Hopeless Delulu 🌻🌜
ஒன்றாகவே பயணிக்கிறோம்
அதனால் நாம் ஒன்றல்ல
நீ பயணி
நான் பரிசல்காரன்
நீ கடந்து செல்ல வேண்டியது
இந்த நதி
நான் கிடந்து உழல வேண்டியது
என் கானல் நதி
கரை சேர்ந்த பிறகு
யாருமற்ற பரிசலின் வெறுமையை
இந்த பிறை இரவில் பார்ப்பது
அவ்வளவு வெம்மையாக உள்ளது
கன மழை பெய்து
கானல் நதியின் மட்டம் உயருகிறது
பயணி இல்லாமலும்.
இந்த நதியில்
இந்த பிறையும் 🌙
பரிசலும்
தனியே மிதந்து கொண்டிருக்கிறது
கானல் நதியில் நான் தத்தளிப்பதைப் போல.
- பாரதி ஆ.ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக