பக்கங்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

மறக்க மனம் கூடுதில்லையே

 நட்சத்திரம் 🌟 3



தோளும் அழியும் நாளும் சென்றென 
நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் 
கண்ணுங் காட்சி தௌவின என்நீத்து 
அறிவு மயங்கிப் பிறிதா கின்றே 
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று 
யாங்கு ஆகுவென்கொல் யானே ஈங்கோ 
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் 
பிறப்புப்பிறி தாகுவது ஆயின் 
மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. 

- அம்மூவனார்

நற்றிணை 397


"இந்த relationship இதுக்கு மேல எந்த அளவுக்கு ஒத்து வரும்னு எனக்கு தெரியல. என்னால இத இதுக்கு மேல எப்படி கொண்டு போறதுனு தெரியல. இப்படியே போனா நமக்குள்ள இன்னும் சண்டை அதிகமாகிட்டே தான் போகும்னு நினைக்கிறேன். நம்ம லவ் continue ஆகனும்னா நம்ம ரெண்டு பேருமே கொஞ்சம் நாள் break எடுத்துக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என சொல்லி தலைவன் தலைவியை விட்டு பிரிந்து செல்கிறான். 

தலைவனை பிரிந்த பிறகு தலைவி depression mode கு சென்றார். இதனால் தலைவியின் தோற்றம் பொலிவிழந்து காணப்பட்டது. Dark circle சூழ்ந்தது. உடல் மெலிய தொடங்கினாள். 

இந்த தோள் அழகு ஒரு நாள் அழியக்கூடும். இடைவெளி எடுத்துக்கலாம் என்று சொன்னவன் வரும் வழி பார்த்து பாரத்து சரியாக சாப்பிடாமல் அவன் மெசேஜை எதிர்பார்த்து மொபைல் ஸ்கிரீனையே பார்த்தனால் பார்வை திறன் குறைந்து கண்ணாடி போட ஆரம்பித்தாள். அறிவினை இழந்து என்னென்னமோ பிதற்ற ஆரம்பிக்கிறாள். வாடைக் காற்றில் பெருகும் காம உணர்வினால் நான் என்னாகுவேனோ என தெரியவில்லை. ஒருநா‌ள் செத்தொழிந்து போனாலும் போவேன் என புலம்ப ஆரம்பிக்கிறாள். 

நான் சாக பயப்படவில்லை. நான் இறந்து மற்றொரு பிறப்பு எடுத்தால், என் காதலனை நான் மறந்திருப்பேனோ என்று தான் அஞ்சுகிறேன். 

சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் 

பிறப்புப்பிறி தாகுவது ஆயின் 

மறக்குவேன் கொல்லென் காதலன் எனவே. 

மறக்காத மனம் வேண்டும். 

அவனை இனி நினைக்காத உள்ளம் வேண்டும் என தலைவி உள்ளம் சிதைவுறுகிறாள். 


காதலின் சிதைவுகள் ஒரு இடைவெளியில் தான் தொடங்குகின்றது. பள்ளத்தாக்குகளில் தான் நதிகளும் ஓடுகின்றது. 

காதல் மீண்டும் பூக்கும். 


- பாரதி ஆ.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக