பக்கங்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

முத்த நிவாரணம் எனக்கில்லையா

நட்சத்திரம் 8 🌻💛



பிரியாத வரம் வேண்டும்

அன்பில் மடந்தை 💖🌞


அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

குறுந்தொகை 20

✍🏼 கோப்பெருஞ்சோழன்


பிரிஞ்சி போனா வருத்தப்படுவாங்கலேனு கொஞ்சம்கூட யோசிக்காம தன்னுடைய துணையைப் பிரிந்து பணி நிமித்தமாக பிரிந்து செல்பவர் திடமான அறிவுடையவர் அப்படீனு சொல்லிக்கிறாங்க. இருந்துட்டு போகட்டும். அந்த பிரிவைத் தாங்க முடியாமல் வருத்தப்படும் நான் பைத்தியமாகவே இருந்து கொள்கிறேன் என சங்க காலத்தில் ஒருவர் புலம்புகிறார்.

இந்த பாடலை எழுதியவர் கோப்பெருஞ்சோழன். சோழ மன்னன் எழுதிய பாடல் இது.

//காதல் பஞ்சம் வந்து நொந்தேனே

முத்த நிவாரணம் எனக்கில்லையா//

என வைரமுத்து ஒரு பிரிவின் தாபத்தை எழுதுகிறார். 

பிரியமும் பிரிவும் தவிர்க்க இயலாதது. ஆனால் அதை தாங்கிக்கொள்ளத்தான் பலரால் முடிவதில்லை.

உரவோர் - வலிமையான அறிவுடையவர்

மடந்தை - அறியாமையில் இருப்பவர்.

அன்பில் மடந்தையாக இருப்பதும் தவறில்லை. 


- பாரதி ஆ.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக