நட்சத்திரம் 4 🌟
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல்
கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
- தேவகுலத்தார்
குறுந்தொகை 3
"நீ ஏன்டி அவன் மேல இவ்ளோ கிறுக்கா இருக்க? அவனும் அவன் மூஞ்சியும். பைத்தியம் மாதிரி ஏதாவது பேசிட்டு கிறுக்கிட்டு இருக்கான். அவனபோய் எப்படிடீ நீ லவ் பண்ணி தொலைச்ச?" என தோழி தலைவியைப் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறாள்.
காதல் மயக்கத்தில் இருக்கும் தலைவி ஈராயிரம் ஆண்டு பழைய ஒயினை பருகியவாறே பதில் சொன்னாள்.
"நான் அவனை லவ் பண்றேன். குறிஞ்சி பூவில் இருந்து தேனெடுக்கும் மலைக் கிராமத்தை சேர்ந்த என் தலைவன் மீது கொண்ட இந்த லவ், இந்த வானம், பூமி, கடல் எல்லாவற்றையும் விட பெரியது."
எல்லாவற்றையும் விட பெரியது. உயர்வானது என ஒரு உறவு தோன்ற காரணம் என்ன? காதலன்றி வேறில்லை எனலாம்.
ஆனால் உண்மையில் ஒருவரிடம் நாம் உணருகின்ற பாதுகாப்புணர்வு தான் மற்ற எல்லாவற்றையும் விட பெரிதாக தோன்றக்கூடும்.
தலைவியை தலைவன் கரங்களால் இறுக அணைத்துக் கொண்டான். இது நாள் வரை தலைவி வாழ்ந்த இந்த உலகைவிட, தலைவனின் கரங்களுக்குள் இருக்கும் போது பாதுகாப்பாக, சுதந்திரமாக, மரியாதையாக உணருகிறாள். அப்போது அவளுக்கு இந்த பிரபஞ்சமே சிறு துண்டு தான்.
பெரும் தேன் இழைக்கும் நாடனின் நட்பு
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று.
- பாரதி ஆ.ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக