பக்கங்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

யாரினும் இனியன் பேரன்பினனே

நட்சத்திரம் 🌟 2



யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

- வடம வண்ணக்கன் தாமோதரன்
குறுந்தொகை 85


கருவுற்றிருக்கும் தன் பெண் குருவிக்கு, வெதுவெதுப்பான கூட்டினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு ஆண் குருவி, இனிப்பு மிக்க கரும்பின் நறுமணமில்லாத வெள்ளை மலரை கோதும். அத்தகைய ஊரினை சேர்ந்தவன் தலைவன். 

தலைவியைப் பிரிந்து onsite போன போது tinder இல் இன்னொரு இணையோடு date செய்தது தலைவிக்கு தெரிந்த பிறகு வீட்டில் மாட்டிக் கொள்கிறான். சமாதானம் செய்ய கவிஞனை/நண்பனை தூது அனுப்புகிறான். கவிஞன் தலைவியிடம் "யாரினும் இனியன், பேரன்பினன்" என்கிறான். 

இந்த உருட்டெல்லாம் போதும், அவன் சொல்லுறது ஒன்னு செய்யுறது ஒன்னா இருக்கு. எல்லாம் வெறும் வாய்ச்சொல் தான் என தலைவி மறுதலிக்கிறாள். 


கொசுறு: இந்த பாடலை எழுதியவர் வடம வண்ணக்கன் தாமோதரன். இவர் வட திசையிலிருந்து வந்த நகை வியாபாரி. வாணிபத்தில் செழித்தோங்கிய நிலம் தமிழ் நிலம். பல நாடுகளில் இருந்து இங்கு வந்து வாணிபம் செய்துள்ளனர். 


- பாரதி ஆ.ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக