பக்கங்கள்

ஞாயிறு, 20 மே, 2012

"உடை"யும் பண்பாடு

பண்பாடு என்பது கண்ணாடித் துண்டுகளில் தெரியும் சூரியனின் பிம்பம் போன்றது. நித்தமும் பிம்பங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் அதன் மூலப்பிரதி என்றும் மாறுவதில்லை.
உடை என்பது வெறும் உடுத்திக் கொள்கின்ற ஆடை, உடலை மறைக்கின்ற துணி என்பதோடு மட்டுமில்லாமல் அது ஒரு சமுகத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

பண்பாடு என்பது சமூகவியல் பார்வையில் இரண்டு வகையாக பார்க்கப்படுகின்றது.
  1. பொருண்மைத் தன்மையுடையது.
  2. பொருண்மைத் தன்மையற்றது.

பொருண்மைத் தன்மை : Material culture
ஒரு இன மக்கள் பயன் படுத்துகின்ற பொருட்கள், வீடுகள், தெரு அமைப்புகள், வழிபாட்டு தளங்கள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவை தீர்மானிக்கும் பண்பாடானது பொருண்மைத் தன்மையுடையது.


பொருண்மைத் தன்மையற்றது : Non-material culture
இது ஒரு சமுகத்தில் பழக்க வழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், சமுக ஒழுக்கங்கள் ஆகியவற்றை சார்ந்தது. இதன் மூலம் பண்பாடு ஒருவனது எண்ணங்கள், உணர்வுகள், நடவடிக்கைகளை வடிவமைக்கின்றது. பொருண்மைத் தன்மையற்ற பண்பாட்டினை தீர்மானிக்கும் நான்கு முக்கிய காரணிகள் , குறியீடுகள், மொழி, சமுக மதிப்பீடுகள், சமுக நெறிமுறைகள் ஆகியன.

          இந்த கருத்தை நாம் உடுத்துகின்ற உடையுடன் ஒப்பிடுகையில் உடையானது ஒரு பண்பாட்டின் அடையாளமாக விளங்குவதை உணர்ந்து கொள்ளலாம். நாம் உடுத்துகின்ற ஆடை ஓவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை. தமிழ் நாட்டில் பெரும்பாலோனோர் அணியும் ஒரு ஆடையாக லுங்கி உள்ளது. இதனை ஈழத்தில் சரம் என்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஈழத்தினை சேர்ந்த தமிழர்கள் லுங்கி கட்டுவதற்கும் ஒரு சிறு வேற்றுமை காணப்படுகின்றது. இங்கு புவியியல் இடம் சார்ந்து வேறு படுகின்றது. கிராமங்களில் வசிப்பவர்கள் கட்டுவதற்கும், கடற்கரையோரம் மீன் பிடிப்பவர்கள் கட்டுவத்ர்க்குமே வேறு பாடு உள்ளது. இங்கு தொழில் முறை சார்ந்து வேறு படுகின்றது. இதில் வயது சார்ந்த வேறு பாட்டையும் காணலாம். ஊரில் இளவட்டப் பையன்கள் கட்டுவதற்கும், பெரியவர்கள் லுங்கி கட்டுவதற்கும் கூட வேறுபாடு உள்ளது.

           உடையானது பண்பாட்டு அளவில் அது பொருண்மைத் தன்மையுடையதாக உள்ளது. கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, ஜிப்பா என பல வகைகள் உள்ளன. ஆனால் அவை காலம் சார்ந்தும் சூழ்நிலை சார்ந்தும் அவற்றை அணிகின்றனர். இங்கு அதன் பொருண்மைத்  இழந்து போய் விடுகின்றது.

திருமண நிகழ்சிகளிலும், கோயில் திருவிழாக்களின் போதும் லுங்கி அணிவதில்லை. அன்றைய தினங்களில் வேட்டி அணிவதையே விரும்புகின்றனர். ஒரு சமுக கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், கோயிலுக்கு செல்லும் போது வேட்டி தான் கட்ட வேண்டும், கோயிலுக்குள் வேட்டி மடித்து கட்டக் கூடாது என்ற நம்பிக்கைகள் உள்ளது. பெரும்பாலும் திருவிழா நாட்களில் புது துணி வாங்குவது வழக்கம்.

ஆடி மாதங்களில் தள்ளுபடிக்கு துணி வாங்குதல் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆடி மாதம் என்பது சடங்கு என்பதையும் தாண்டி ஒரு வியாபாரத்தந்திரமாக துணிக்கடைகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த துணிக்கடைகள் விற்கும் துணிகள் நமது பண்பாட்டை சாராதவை என்ற போதிலும் அதனை விற்க நமது மக்களிடையே உள்ள பண்பாட்டு, மதம் சார்ந்த நம்பிக்கை தேவை படுகின்றது. இங்குதான் நமது சமுகம் எனும் கண்ணாடியில் பண்பாட்டு சூரியனின் நிழல் உடைகின்றது.

புதன், 18 ஏப்ரல், 2012

இன்னும் மறுபிறவிதான்...

கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி, தூத்துக்குடியில் கர்ப்பிணிப் பெண் இறந்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் சேது லட்சுமியை அப்பெண்ணின் கணவர் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மயக்கயியல் மருத்துவரான சேதுலட்சுமி சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சயளித்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என கூறுவர். கிராமங்களில் புள்ளத்தாச்சி பெண்கள் மரணமடைந்தால் அவர்களின் நினைவாக சுமைதாங்கி கல்கள் வைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. அன்று போதிய மருத்துவ வசதி இன்மையால் பல பெண்கள் இறந்து வந்தனர். ஆனால் இன்று மருத்துவ வசதிகள் வளர்ச்சி அடைந்து உள்ள போதும் பெண்களுக்கு பிரசவம் என்பது ஒரு மறுபிறவியாகவே இருந்து வருகின்றது. சுகப்பிரசவம் என்பது தற்பொழுது அரிதாகவே உள்ளது. இதற்கு சில தனியார் மருத்துவமனைகளே காரணமாகின்றன.

பிரெஞ்சு தத்துவவாதி மைக்கல் பூக்கோ, "மருத்துவமனைகள், வகுப்பறை, சிறைச்சாலை" ஆகியவை மூன்றும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை என குறிப்பிடுகின்றார். இவரது கருத்துப்படி, முற்றிலும் அறநெறிகளை துறந்து விட்ட ஒரு சமூகம், வணிக மயமாகிவிட்ட மருத்துவத்துறையில் உயிர்களின் மீது அக்கறை குறைந்து பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்படுகின்றது.

சமீபத்தில் கொல்கத்தா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேலானோர் இறந்தனர். இச்சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் மருத்துவமனையில் பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை கருவி எதுவும் பொருத்தப்படவில்லை என காவல்துறையினரால் கூறப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் மருத்துவர் ஒருவர் பள்ளியில் படிக்கும் தன் மகனைக் கொண்டு தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். இது போன்று பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இது போக பணத்திற்காக சில தனியார் மருத்துவமனைகள் சுகப்பிரசத்தினைக்கூட அறுவை சிகிச்சை அளித்து லாபம் பார்க்கின்றனர். இதுபோக மாறிவருகின்ற உணவு பழக்க வழக்கங்கள், பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இன்மை, பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு என்பன போன்ற காரணங்களால் பிரவத்தின் போது மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டிற்கான சி.என்.என். நாயகன் விருதினை ராபின் லிம் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவில் தாய்மையடையும் பெண்களுக்கு மருத்துவ சேவையினை ஆற்றி வருகின்றார். ஆரோக்கிய அன்னை பூமி இயக்கம் மூலம் கர்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மருத்துவ சேவை செய்து வருகின்றார். 

ஒவ்வொரு குழந்தையின் முதல் மூச்சுக் காற்றும் பூமியில் படும்போது அமைதியையும் அன்பையும் சுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு அன்னையும் திடமான ஆரோக்கியமான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தை"யும் பாதுகாப்பாக பிறக்க வேண்டும். ஆனால் இந்த பூமியில் எங்கும் இது போல நடக்க சாத்தியமில்லை" என ராபின் லிம் கூறுகின்றார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் இந்தியாவில் தாய்-சேய் இறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பெண்கள் பிரசவத்தின் போது இறக்கின்றனர் என்ற தகவலை உலக சுகாதார மையம் அளிக்கின்றது. இதில் இந்தியாவில் 47.57/1000 என்ற விகிதத்தில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணம் உள்ளதாக தகவலை அளிக்கின்றது.

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது.

மருத்துவ வசதிகள் பெருகியுள்ள இந்த காலத்திலும் குழந்தை பிறப்பது என்பது பெண்ணுக்கு மறு பிறவியாகவே இருந்து வருகின்றது.

ஊடகங்களும் தொன்மங்களும்

"ஊடகங்கள் மூலம் தினந்தோறும் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது" என நாட்டரியல் அறிஞர் முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

 "சங்க கால மக்கள் நாட்டார் மரபு" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் முனைவர் இ.முத்தையா அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டார் வழக்காற்றியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் ஆவார்.

சங்க கால கவிதைகளில் சடங்கு மற்றும் தொன்மம் சார்ந்த கருத்துகள் அதிகம் இடம் பெறுகின்றன. இயற்கையையும் பெண்ணையும் பற்றிய புரிதல் தான்  சங்க இலக்கிய அகப்பாடல்களாக உள்ளன. இயற்கையும் பெண்ணும் வளமைத் தன்மையுடையவர்கள். வெப்பம் என்ற இயக்க ஆற்றல் இருவரிடமும் உள்ளது. இந்த குறியீடுகளின் வெளிப்பாடு தான் முளைப்பாரி சடங்குகளில் வெளிப்படுகின்றது. முளைப்பாரி குடம் பெண்ணின் கருப்பையை குறிக்கின்றது. சமுக இயக்கத்திற்கு இயற்கையும் பெண்ணும் முக்கியம் என்பதின் வெளிப்பாடே இது என முனைவர் இ.முத்தையா கூறுகின்றார்.

சங்க காலப் பாடல்கள் முழுவதும் தொன்மங்களை உருவாக்குகின்றன என இவர் கூறினார். அதே நேரத்தில் தொன்மம், பழமை என்ற இரு சொல்லும் வேறுபட்டு முரண்பட்டு உள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

இன்று வெளிவருகின்ற செய்திகள், விளம்பரங்கள் மூலமாக பல விதமான தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட ஐந்து வட இந்தியர்கள் மீது ஊடகங்கள் தொடர்ந்து தொன்மங்களை உருவாக்கிக்  கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் வெளியிடும் ஒவ்வொரு செய்தியும் மக்களிடையே தினந்தூரும் தொன்மங்களை உருவாக்கி வருகின்றன என இவர் கூறினார்.

ஊடக விளம்பரங்களும் பல வித தொன்ம கட்டுடைப்பினை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. "ப்ரீத்திக்கு நான் கியாரண்டீ " என்பன போன்ற விளம்பரங்கள் மொழி மூலம் ஆக தொன்மங்களை உருவாக்குகின்றது. "பலம் வாய்ந்த பீமனால் ஒரு கல்கூரையை உடைக்க முடியவில்லை" என சித்தரிக்கும் விளம்பரம் மூலம் புராணங்கள் மீது ஒரு புதிய தொன்மம் உருவாக்கப்படுகின்றது.

ஊடகங்கள் தெரிநிலை தொன்மம், குறிப்புநிலை தொன்மம் என இரு வேறு நிலைகளில் தொன்மங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்கிறார்.

வியாழன், 15 மார்ச், 2012

ஊருக்கு செல்லும் வழி...

நீச்சல் அடிக்க கற்றுக் கொண்ட கிணறு
திருட்டுத் தனமாய் பறித்த மாமரம்
பிடித்து மீண்டும் பறக்கவிட்ட தும்பி
வாடகை சைக்கிளில் அடித்த குரங்கு பெடல்

ஏரிக்கரையோரம் உள்ள நாவல் மரம்
கால் உடைந்த அய்யானார் சிலை
ரயில் வண்டி விளையாடிய மாட்டுக்கொட்டகை
அக்காக்களோடு விறகு வெட்டச் சென்ற ஏரிக்கரை

மூடிக்கிடக்கும் டூரிங் டாக்கீஸ்
போஸ்டர் ஒட்டியிருந்த டீக்கடை
புளிய மர நிழலில் உள்ள சுமைதாங்கிக் கல்
பாதி அரவையிலேயே கரண்ட் போன ரைஸ்மில்லு


இவையெல்லாம் அழைக்கின்றன...
நான்கு நாட்கள்
விடுமுறைக்காக
காத்திருக்கின்றேன்...

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு

சாகின்ற வரைக்கும் வாழ்கின்ற வயசு
- பேட்டைக்காரன் வ. ஐ. ச. ஜெயபாலன் 
ஆடுகளம் படத்தில் நடித்த பேட்டைக்காரனை தமிழ் திரைப்பட ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். தான் நடித்த முதல் படத்திலேயே இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டின் சிறப்பு நடுவண் குழு வழங்கிய தேசிய விருதினை வென்றார். நடிகராக தமிழ் ரசிகர்கள்ளல் அறியப்படுகின்ற இவர் ஓர் ஈழத்துக் கவிஞர். இவர் ஈழத்தின் வன்னிப் பகுதியை சார்ந்தவர். நவீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர். இவரது பெயர் வ. ஐ. ச. ஜெயபாலன்.
இவர் சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் மாணவர்களோடு புதன்கிழமை ( மார்ச், 14, 2012 ) அன்று நடந்த சந்திப்பில் நடைபெற்ற விவாதங்கள்...

ஆடுகளம் படத்தில் நடிப்பதற்காக, மதுரை வட்டார மொழியை எப்படி கற்றுக் கொண்டீர்கள்?
படப்பிடிப்பு தொடங்குவதற்கு இரண்டு மாதத்திற்கு முன்னரே நான் மதுரையில் தங்கி கற்றுக்கொண்டேன். மடுறரை வட்டார மொழியையும், உடல் மொழியையும் கற்றுத்தர அங்கு பல நிலையங்கள் உள்ளன. அந்த நிலையங்களை எல்ள முடியும். அங்கு "Sit like Kingfisher with Kingfisher"என்பது தான் பாடம்.லாம் தமிழ்நாடு அரசு தான் நடத்துகின்றது. பச்சை நிற போர்டு போட்டு எல்லா இடங்களிலும் உள்ள டாஸ்மாக் பார் தான் அது. இங்குதான் மக்களின் இயல்பான உடல்மொழியையும் பழக்கங்களையும் எளிதில் கற்றுக்கொள்

சினிமாவில் நடிக்க விரும்பும் கனவு கதாபாத்திரம் என்ன?
சினிமாவில் நடிப்பது என்பதே எனது கனவு கிடையாது. கவிஞன் ஆக வாழ்வது தவிர வேறு எதுவும் எனது ஆசையில்லை. மற்றவரை பணிய வைக்காமல், மற்றவரை பணிய அனுமதிக்காமல் வாழ்வதே எனது லட்சியம்.

எழுத்தாளர் - நடிகர் என்ன வேறுபாட்டை உணர்கின்றீர்கள்?
எழுத்து நடிப்பு இரண்டுமே இருவேறுபட்ட கலைவடிவம். கவிஞனாய் இருக்கும் போது எல்லாம் கவிஞனது கட்டுப்பாட்டில் இருக்கும். கவிதை எழுத எதுவும் பெரியதாய் செலவு இல்லை. ஒரு பேனாவும் தாளும் போதும். சினிமாவில் நடிக்கும் போது நடிகன் இயக்குனரது .கட்டுப்பாட்டில் இருப்பான். ஆடுகளம் படத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னை அணுகிய போது, நடிப்பு tஎனக்கு ஓஹ்து வருமா என சந்தேகத்தோடே கேட்டேன். வெற்றிமாறன் தான் நம்பிக்கையூட்டி என்னை நடிக்க வைத்தார். சினிமாவில் நடிப்பு என்பது கண் கட்டி வித்தை போன்றது. இயல்பான வெளிப்பாடுகளை விட கேமரா கோணங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தும் பாவனைகளே சிறந்த நடிப்பாகின்றது. ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபத்திரத்திற்கு உயிர் கொடுத்ததில் நடிகர் ராதாரவியின் குரலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் வழக்கமாக தான் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் வேலைகளை இரண்டு நாட்களில் முடித்து விடுவார். அனால் இப்படத்திற்காக தனி கவனம் எடுத்து என் உடல் மொழிக்கு ஏற்ப குரலை மாற்றி, கிட்டதட்ட இரண்டு வாரங்கள் வரை டப்பிங் பேச எடுத்துக் கொண்டார். பேட்டைக்காரன் கதாபாத்திரத்திற்கு அவரது குரல் இன்னும் உயிர் சேர்த்தது.


தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் எதிர்மறையான கதாபத்தித்தில் நடித்தது உங்கள் வாழ்வில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்கியதா?

இந்த படத்தில் இருந்து நடிப்பைக்க் கற்றுக் கொண்டதைத் தவிர வேறு எதுவும் இல்லை.


சினிமாவில் நடித்த பிறகு புலம் பெயர்ந்த தமிழர்களிடம் உங்களைப் பற்றிய அடையாளம் சார்ந்த பிம்பங்கள் என்ன?
நவீன இலக்கியத்தின் மீது இன்றைய இளைஞர்களிடம் நல்ல ஈடுபாடு உள்ளது.நவீன இலக்கியவாதியாக இருப்பது இளமையை வாழ்வதற்கு நிகராய் உள்ளது. பல இளம் படைப்பாளிகளுடன் நானும் ஓர் படைப்பாளியாய் இருப்பது ஓர் உத்வேகத்தை அளிக்கின்றது. நான் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகின்றது. வயது முதிர்ந்த தோழன், இளம் வயது தோழிக்கும் இடையே நிகழும் உரையாடல் போல நான் எழுதிய கவிதை ஒன்றில் இடம்பெறும் வரிகள்,
                    "தோழா உனக்கு எத்தனை வயசு?
                     தோழி எனக்கு 
                     சாகின்ற  வரைக்கும் வாழ்கின்ற வயசு..."

தமிழத்தில் உள்ள தமிழர்களிடம் உங்களைப்பற்றிய பிம்பம் என்ன?
படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கக்கூடிய நாடு தமிழ்நாடு. நல்ல கலைஞர்கலை மதிக்கும், எல்லை கடந்து நேசிக்கும் பண்புடைய ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். சினிமாவில் நடித்தால் முதல்வனாகி விடலாம் என்பதெல்லாம் ரசிகர்களை கொச்சைப்படுத்தும் போக்கு. சங்க இலக்கியமான புறநானுற்றில், தன வீற்றிகு வந்த புலவரை உபசரித்து, தன மனைவியிடம் எனக்கு என்ன மரியாதை செய்கின்றாயோ அதையே இப்புலவனுக்கும் அளிக்க வேண்டும் என சொல்லும் தலைவனைப் பற்றிய பாடல் உள்ளது. இப்பாடலில் வரும் தலைவன் போல பெருந்தன்மை கொண்டவர்கள் தமிழ் ரசிகர்கள். இதில் வரும் சங்க இலக்கியப் புலவனைப் போன்றவன் நான்.

இன்று கூட நான் மதுரைக்கு சென்றால் அங்கு உள்ளவர்கள் என்னை ஒரு உறவுக்கரானாகவே கருதுகின்றனர். நேசித்தலும், நேசிக்கப்படுவதைவிட வாழ்வை செழுமைப் படுத்தும் செல்வம் வேறு எதுவும் இல்லை.

( இவரது வலைப்பூவினை காண இங்கே சொடுக்கவும்...

புதன், 14 டிசம்பர், 2011

சில்லறை இல்லைங்க...

அமெரிக்காவில் வால்மார்ட் வருகையால் சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என 2008 ஆம் ஆண்டு அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு கூறுகின்றது.
walmart


அயோவா ஸ்டேட் யூனிவர்சிட்டி (Iowa state university), ‘கிராமப்புற சமுதாயத்தின் மீது வால்மார்ட் வர்த்தகம் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பில் ஆய்வை நடத்தியுள்ளது.


வால் மார்ட் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த தொடங்கிய முதல் ஆண்டிலேயே அமெரிக்காவின் 34 நகரங்களில் 2 விழுக்காடு விற்பனை சரிவு மற்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் 47 விழுக்காடு சில்லறை விற்பனை வர்த்தகத்தை வால்மார்ட் கபளீகரம் செய்தது. சாதாரண சில்லறை விற்பனை வியாபாரிகளுக்கு சரிபாதி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சாதாரண சில்லறை விற்பனை நிறுவனங்கள் என்பது சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளை விடப் பன்மடங்கு பெரியவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


வால்மார்ட் வருகையால் இதர சில்லறை விற்பனை நிறுவனங்களின் வியாபாரம் சரிபாதியாக குறைந்தது மட்டுமின்றி சில்லறை விற்பனைத் துறையில் வேலைவாய்ப்பையும் பாதித்தாக மற்றுமொரு ஆய்வு கூறுகிறது. சில்லறை விற்பனை அங்காடிகளில் வேலை செய்தவர்களின் வருமானம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலரில் தொடங்கி 1.4 பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,50,000 பேர் இதனால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.


இந்திய நாட்டின் சில்லறை வர்த்தகம் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்துவிடப்பட்டால், அதில் வால்மார்ட் மட்டும் நுழையப்போவதில்லை. அதைவிட பலம் பொருந்திய நெதர்லாந்து நாட்டின் அஹோல்ட் (Ahold), பிரான்ஸ் நாட்டின் கேரிஃபோர் (Carrefour) ஜெர்மன் தேசத்தின் மெட்ரோ, இங்கிலாந்தின் டெஸ்கோ போன்ற நிறுவனகளும் சேர்ந்தே வரப்போகின்றன. ஏற்கெனவே ரிலையன்ஸ் போன்ற இந்தியப் பெருநிறுவனங்களால் சில்லறை விற்பனை வியாபாரிகள் தள்ளாட்டத்தில் உள்ளார்கள். இந்நிலையில், ரிலையன்ஸையே மிரட்டும் வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்ள் சில்லறை வர்த்தகத்தைத் தொடங்கினால் சிறு வியாபாரிகள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டியது தான்.


நான்கு கோடி பேருக்கு வாழ்வளிக்கும் சில்லறை வர்த்தகம், இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 10 முதல் 11 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதில் 97 விழுக்காடு முறை சாரா வர்த்தகம். இவர்கள் காலங்காலமாக சில்லறை வர்த்தகம் செய்து வருபவர்கள். இவர்களில் கைவினைஞர்களும் அடக்கம்.


அந்நிய நேரடி மூலதனத்தால் விலைவாசி (பணவீக்கம்) குறையும் என்ற கூற்றும் உண்மை அல்ல. உள்ளூர் சந்தையில் உள்ள சில்லறை விற்பனைப் போட்டியே விலையைக் குறைக்கக் காரணமாக உள்ளது. ஒரே ஒரு விற்பனையாளன் என்ற நிலையில் விலை நிலவரம் மிக மிக அதிகபட்சமாகவே இருக்கும். இன்று இருப்பதைவிட பன்மடங்கு விலைவாசி உயர்வு ஏற்படும் என்பதே உண்மை.


வேளாண்மைத் துறையில் இடைத் தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்று கூறுவது வெறும் ஒப்பனையே. அந்நிய கம்பெனிகள் விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதல் செய்யும் என்பது உண்மைதான் என்றாலும் இடைத்தரகர்களின் பங்கையும் அந்நியக் கம்பெனிகளே எடுத்துக் கொள்ளும் என்பதை கவனிக்கவேண்டும். விவசாயிகளுக்குத் தற்போது கிடைத்து வரும் வருவாயை விட குறைவாகவே கிடைக்கும். காரணம், ஒரு சில மிகப்பெரும் நிறுவனங்களே சந்தையில் இருப்பார்கள். விவசாயிகளிடம் ஒப்பந்த வாணிபம்கூட செய்வார்கள். விவசாய விளைபொருள்களுக்கு, விவசாயிகள் கோரும் விலை கிடைக்காது. பன்னாட்டு கம்பெனிகள் மட்டுமே பொருள்களை வாங்கும் என்பதால், அவர்கள் சொல்லும் விலைக்கு விற்காவிட்டால், விற்பனைக்கு வேறு வழி இல்லை. வாங்க வேறு ஆள் இல்லை என்ற நிலை வந்தால், அடி மாட்டு விலைதானே!


அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் வேளாண் விளைபொருள்கள் வீணாவது தவிர்க்கப்படும் என்று கூற்றில் மட்டும் உண்மை உண்டு. ஆனால் அதனால் நமது விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இந்த உபரியின் பெரும் பங்கு பன்னாட்டு கம்பனிகளுக்கே செல்லும். நம் நாட்டில் உள்ள பல கூட்டுறவு வேளாண்மை அங்காடிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் எல்லாம் காணாமல் போய்விடும்.


இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரும் போது ஆண்டுக்கு அறுபது லட்சம் பேர் வேலை வாய்ப்பினை பெறுவர் என மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா கூறுகின்றார். ஆனால் அந்நிய முதலீட்டால் உடனடியாக இரண்டரை கோடி பேர் வேலை வாய்ப்பினை இழப்பர். 


நம்மூரில் எட்டாவது பத்தாவது பெயில் ஆனா மளிகைக்கடையில் வேலைக்கு சேர்த்து விடுவர். அந்த பையன் ஒரு ஐந்து ஆண்டுகளில் தனியாக ஒரு சிறு கடையை அவன் தெருவில் தொடங்கும் அளவுக்கு வளர்ந்துவிடுவான். ஆனால் வால் மார்ட் போன்ற நிறுவனங்களில் பட்டப்படிப்பு முடித்து முதுகு வளைந்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை. அவனால் அதன் பிறகு எந்த வளர்ச்சியையும் தன்  வாழ்க்கையில் காண இயலாது.


இன்று தெருவோரக் கடைகளில் கூட தலையாட்டி பொம்மையோ, மரப்பாச்சி பொம்மையோ காணமுடிவதில்லை. எல்லாம் பொசு பொசு கரடி பொம்மையும் நாய் பொம்மையும் தான்.


கிராமங்களில் துண்டு போட்டு மூடி விரல்களில் விலை பேசிய வியாபாரிகள், இன்று அந்த துண்டை தலையில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு உள்ளது நமது இந்திய பொருளாதாரம்.


Iowa state university யின் ஆய்வு : 
http://www2.econ.iastate.edu/faculty/stone/10yrstudy.படப் 
http://ageconsearch.umn.edu/bitstream/17713/1/ar970189.படப்
கட்டுரைக்கு உதவிய தளம்:
http://www.tamilpaper.net/?p=4999

வெள்ளி, 9 டிசம்பர், 2011

புதன், 7 டிசம்பர், 2011

கடவுள் மறந்த மொழி


surrealism


வன்மத்தின் எச்சங்களும்
காமத்தின் மிச்சங்களும்
பின்னிரவில்
உமிழப்படுகின்றன
கனவுகளாக...


உறக்கம் கொண்ட
பின் யாமப் பொழுதுகளில்
விழித்துக்கொண்டிருக்கின்றது
உள்மனம்...

கடவுள் மறந்த மொழி
யாராலும் பேச முடியாத மொழி
எல்லோரும் உணரும்
ஒரு உன்னத மொழி
கனவு...

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அப்புறம் மழையும் பெய்தது...

தட்டான்கள் பறக்கும் மாலைப்பொழுதில்
தேநீர் கடைக்கு நடந்து செல்கையில்
முகத்தில் அறைகின்றது ஆடிக்காற்று
தேநீர் கடையில் நான் கேட்டிருந்த
எனக்கான கோப்பை தேநீர் என் கைகளில்...
காத்துக் கொண்டிருக்கின்றேன் அவளுக்காக...
பேருந்தில் ஏறிச் சென்றால் அவள்
சிறு புன்னகையுடன்...
எனது தேநீர் கோப்பையில் மேகங்கள் மிதக்கின்றன...
அப்புறம் மழையும் பெய்தது...

புதன், 30 நவம்பர், 2011

கூதிர் காலம்

இந்த கூதிர் கால மழை அழகானது...
மகிழ்ச்சி, துக்கம், கோபம் என ஒரு சேர
எல்லாவற்றையும் குறைக்கின்றது.

இந்த கூதிர் கால பயணம் இனிமையானது...
அன்பு, பிரிவு, தவறுகள் ஆகியவற்றை மறந்துபோக
நினைவு கொள்ளச் செய்கின்றது.

இந்த கூதிர் கால தேநீர் இதமானது...
கடன், புத்துணர்வு, அரட்டை என களிப்படைய
நண்பர்களைக் கொடுக்கின்றது.

வியாழன், 24 நவம்பர், 2011

திரை மொழி

பொதுவாக, இந்திய புராணங்களை வாசகன், வாசிக்கும் போது அவனுக்கு முக்கிய கதா பாத்திரங்களாக தலைவன், தலைவி மற்றும் எதிரி தேவைப்படுகின்றான்.
பொதுவாக கதை சொல்லலில் மூன்று படிநிலைகள் உள்ளன.
  • சமநிலை
  • பிரச்சினைக்கு உள்ளாக்குதல்
  • மீண்டும் சமநிலை
Hollywood திரைப்பட படைப்பாளிகள் 1940 வரை இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி வந்தனர்.
திரைப்படங்களை பெரும்பாலும் நாடக அரங்குகளிலேயே தயாரித்தனர்.
Henry ford என்பவர் சினிமாவினை சந்தைபடுத்தும் முறையை பெரிது படுத்த விரும்பினார். ஒரு அரங்கில் பத்து விதமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கும் விதத்தில் வடிவமைத்தனர்.
அந்த காலங்களில் Hollywood இன் ஐந்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்
  1. MGM
  2. UNIVERSAL
  3. 20th century FOX
  4. WARNER BROTHERS
  5. PARAMOUNT
1902 ஆம் ஆண்டு முதல் கதை சொல்லும் உத்திகளை கற்று வந்தவர்கள், 1930க்கு  பிறகு திரைப்படங்களை வியாபாரத்தை விரிவுபடுத்த புதுப்புது உத்திகளை கையாளத்துவங்கினர்.
Edwin S. Porter:
1902 ஆம் ஆண்டுகளில் அரங்குகளில் மட்டுமே படம்பிடிக்கப்பட்ட சினிமாவினை இயற்கை சூழலில் பொது இடங்களில் படம் பிடிக்க ஆரம்பித்தார். கதை சொல்லலில் படத்தொகுப்பு(Editing) உத்தியினை அறிமுகப்படுத்தினார். இவரது Great Train Robbery திரைப்படம் கேமரா அசைவுகளுக்கு (Camera Movements) முன்னோடியாக விளங்குகின்றது.
Georges Melies:
தந்திர கலை நிபுணரான இவர் தனது திரைப்படங்களில் தந்திர காட்சியினை(Special Effects) பயன் படுத்தினார். திரைப்படத்தை ஒரு சிறந்த Magic Show ஆக மாற்ற சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்.
Classical Hollywood Film Making:
மக்களுக்கு நன்கு அறிந்த ஒரு நடிகரோ நடிகையோ தான் கதையின் முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
Hero, Heroine என்ற நட்சத்திர அந்தஸ்து இல்லாமலும் படம் எடுக்க இயலும் என ரச்யத்திரைப்படங்கள் நிரூபித்தன. Sergei M. Eisenstein இன் Battleship Potemkin திரைப்படம் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
Eisenstein திரைப்பட தொகுப்பிற்கு புது உத்தியை அறிமுகப்படுத்தினார். இதன்படி, திரைப்படத்தில் இரு வெவ்வேறான காட்சிகளை இணைக்கும் போது அது மூன்றாவது பொருளை கொடுக்க வேண்டும்.
எகிப்திய மொழி வடிவமான Hieroglyphic, ஐ திரைப்படத்தொகுப்பில் பயன்படுத்திக் காட்டினார்.
இதன் மூலம் திரைப்படங்களில் Montage எனும் படத்தொகுப்பு உத்தியினை அறிமுகப்படுத்தினார்.
  • Intellectual Montage
  • Metric Montage
இதற்கு முன்பு வரை Hollywood இல் Classic Film Editing Theory என்ற முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன்படி திரைப்படம் செயற்கையானது என்பது பார்வையாளனுக்கு தெரியாத வகையில் படத்தொகுப்பு (Continuity Film Editing) செய்து வந்தனர்.
Eisenstein இன் கூற்றுப்படி ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தவறு. ஒன்றும் ஒன்றும் மூன்றாகும்.
mise - en - scene:
காமராவால் படம் பிடிக்கப்படும் போது காமேரவிற்கு முன்னாள் திரையில் என்ன தோன்ற வேண்டும் என்பதை தீர்மானிப்பது.
இது இரு நிபந்தனைகளுக்கு உட்பட்டுள்ளது.
  1. நாட்டில் உள்ள கலாச்சாரம் (Law of Country)
  2. நாட்டில் உள்ள சட்ட முறைகள் (Culture of Country)

புதன், 9 நவம்பர், 2011

அச்சுறுத்தும் அதிர்வுகள் - The Shining

சிறு வண்டு போல ஒரு மஞ்சள் நிற கார், வளைவுகள் நிறைந்த மலைகளுக்கு ஊடே செல்கின்றது. பின்னணியில் அச்ச உணர்வை தூண்டும் வகையில் பின்னணி இசை. அந்த காரில் செல்பவர்களுக்கு ஏதோ நிகழப் போகின்றது என்ற அச்ச உணர்வை படம் பார்பவர்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகின்றது "The Shinning" திரைப்படம்.

Horror வகை நாவல்களில் புகழ்பெற்ற எழுத்தாளரான அமெரிக்காவைச் சார்ந்த Stephen king இன் நாவலைத் தழுவி Stanley Kubrick இயக்கிய திரைப்படம் The Shining. இத்திரைப்படம் எதார்த்தத்திற்கு மீறிய புனைவுக்கதைகள் (மிகைஎதார்த்தம்) வகையைச் சார்ந்தது.

இத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சி, ஏராளமான வளைவுகள் நிறைந்த மலைகளின் ஊடே ஒரு கார், ஒரு தங்கும் விடுதியை நோக்கி செல்லுகின்றது. இக்காட்சிகள் பறவைக் கோணத்தில்(Aerial photography) படம் பிடிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியின் போது இடம்பெறும் பின்னணி இசையானது, ஏதோ பதட்டமான நிகழ்வு நடைபெற உள்ளதை (fore shadowing technique) முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் உள்ளது.

இத்திரைப் படத்திற்கென பிரத்யேகமாக steady cam வடிவமைக்கப்பட்டது. Stanley Kubrick இதற்கு முன்பு தனது A Clock work Orange திரைப்படத்திற்காககுறைந்த f எண் கொண்ட(f 1/1.21) ஆடியை (லென்ஸ்) வடிவமைத்து பயன்படுத்தினார்.

The Shining திரைப்படம் திகில் படங்களில் தனி முத்திரை பெற்றுள்ளது. வழக்கமான திகில் படங்களில் இருந்து காட்சியமைப்பில் வேறு பட்டு இருந்ததே இதற்கு காரணம்.

தமிழில் வெளிவந்த "சுப்ரமணியபுரம்" திரைப்படமும், இத்திரைப்படத்தின் தொடக்கக்காட்சி ஏற்படுத்தும் உணர்வைப் போன்று ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் தொடக்கக்காட்சி, மதுரை நகரின் இரவுப் பொழுதினை படம் பிடித்தவாறு கேமரா அலைந்து கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல பின்னணி இசையும் உள்ளது.

திங்கள், 24 அக்டோபர், 2011

கனவு நிலை உரைத்தல்

கனவுக்குறிப்புகள்
அக்டோபர், 20,2011
கனவின் தொடக்கத்தில் இரண்டு ஓவியங்கள்

கனவுக்குறிப்புகள்


அரண்மனையின் முகப்பில் இருந்து போருக்கு தயாராக செல்லும் குதிரைப்படை,
கவிதை போன்று எது ஓவியம் வரையப்பட்ட ஒரு சுவரின் ஓவியம், சுவரின் இடது ஓரம் ஒரு சைக்கிள்...

இவ்வாறாக கனவு தொடங்குகின்றது.

கிராமத்தில் இருந்து காட்டுக்கு செல்லும் வழியில் நான் சென்று கொண்டு இருக்கின்றேன். நான் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு நாய் என்னை துரத்த ஆரம்பிக்கின்றது. நான் ஓடிக்கொண்டிருக்கும் பாதையின் இடது புறம் பெரிய பள்ளம், வலது புறம் ஒரு பூந்தோட்டம். அந்த பூந்தோட்டம் வேலி போடப்பட்டிருக்கின்றது. நாய்க்கு பயந்து நான் வேலியைத் தாண்டி பூந்தோட்டத்திற்கு உள்ளே செல்கின்றேன். தோட்டத்திற்கு மற்றொரு வழியாக ஒரு ஆடு மேய்க்கும் பெண் தலையில் சாப்பாடு கூடை சுமந்து கொண்டு வருகின்றாள். அவளுக்கு முன்னால் ஆடு வருகின்றது. நான் அந்த பூன்தொட்டத்திலேயே இருக்கின்றேன். ஆடும் நாயும் ஒன்றாக நிற்கின்றன. பூந்தோட்டத்தில் இருந்து நான் முன்பு வந்த பாதையில் வந்து நின்று கொண்டிருக்கின்றேன்...